Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புதிய ரக வேர்க்கடலை விவசாயிகளுக்கு விநியோகம்

புதிய ரக வேர்க்கடலை விவசாயிகளுக்கு விநியோகம்

புதிய ரக வேர்க்கடலை விவசாயிகளுக்கு விநியோகம்

புதிய ரக வேர்க்கடலை விவசாயிகளுக்கு விநியோகம்

ADDED : ஜன 01, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
வானுார் : வானுார் தாலுகாவில் ராபி பருவத்தில் வேர்க்கடலை 25 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு வேர்க்டலை விதை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் தொகுப்பு செயல் விளக்கம் அமைக்க புதிய ரக வேர்க்கடலை ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 25 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், தீரஜ், நித்திய ஹரிதா ரகங்கள், ஆந்திர மாநிலங்களில் வெளியிடப்பட்ட ரகங்களாகும். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட விஆர்ஐ 10, வயது 95 நாட்களில், மகசூல் ஏக்கருக்கு 1,300 கிலோ தரக்கூடியது. இந்த ரகங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட உதவி விதை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ராபி வேர்க்டலை 25 ஏக்கர் பரப்பளவில் விதைப்பண்ணை அமைக்க, வேர்க்கடலை விதைப் பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு விதைகளை 50 சதவீத மானியத்தில், வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி விதை அலுவலர் மோகன் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us