Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு

ADDED : ஜூன் 03, 2025 12:20 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், அரசு வீடு கட்டும் திட்டங்களின் கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் நிலை குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் நிலை, வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நிலை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ் நடக்கும் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டில் தரைத்தளம் அமைத்து கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும், 2024-2025ம் ஆண்டில் கொடுக்கப்பட்டு கட்டிமுடிக்கப்படாமல் உள்ள வீடுகளை கட்டி முடித்து அதற்கான கணக்குகளை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us