ADDED : ஜன 03, 2024 12:05 AM
விழுப்புரம் : திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துாய்மைப் படுத்தும் பணி நடந்தது.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. இப்பணியை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சண்முகம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அட்வகேட் அசோசியேஷன் பூபால், வழக்கறிஞர் விஜயன் மற்றும் கோர்ட் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.