Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது

ADDED : மார் 16, 2025 11:09 PM


Google News
விழுப்புரம்; விழுப்புரத்தில், கடனாக மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிய குடிமகனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மாம்பழபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 50; விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் பணியிலிருந்த போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 45; கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளார்.

தர மறுத்த மாசிலாமணியை, பணியை செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கினார். டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் காமராஜன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us