ADDED : மார் 16, 2025 11:09 PM

விழுப்புரம்; வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் ராஜயோக தியான நிலையத்தில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் 21ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவையொட்டி, சிவனின் மகிமைகள் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. டாக்டர் சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினார். நிர்வாகி செல்வமுத்துக்குமரன் தலைமையில் பிரம்மா குமாரர்கள், பிரம்மா குமாரிகள் பங்கேற்றனர்.
இந்த மையத்தில் தினமும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:30 வரை இலவசமாக தியான பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.


