ADDED : செப் 12, 2025 04:02 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் அய்யனார், பிடாரிஅம்மன் கோவிலில், கடந்த 7ம் தேதியன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
தொடர்ந்து ஊரணிப் பொங்கல் மற்றும் கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர் திருவிழா நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது.
முன்னதாக மூலவர் அய்யனார், பிடாரி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேர் வடம் பிடித்து வழிபட்டனர்.