ADDED : மார் 22, 2025 08:49 PM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த தாயனுார் அரசு நடுநிலைப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் லாவண்யா ராஜேஷ் தலைமை தாங்கினார். பி.ஆர்.சி., மேற்பார்வையாளர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், விஜயகுமார், துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தனர்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன்கள் மேல்மலையனுார் கண்மணி, செஞ்சி விஜயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.