Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய இருவர் மீது வழக்கு

ADDED : மே 11, 2025 01:30 AM


Google News
விழுப்புரம்: வளவனுார் அருகே முன் விரோதத்தில் தொழிலாளியை மது போதையில் தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப், 18; கூலி தொழிலாளி. கெங்கராம்பாளையம் டைல்ஸ் கடையில் வேலை செய்தார்.

நேற்று காலை குடிபோதையில் அங்கு வந்த அவரது உறவினர்கள், மதகடிப்பட்டு தியாகராஜன், 28; கதிர், 32; ஆகியோர், முன் விரோதம் காரணமாக பிரதீப்பிடம் தகராறு செய்து, தாக்கினர்.

காயமடைந்த பிரதீப் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் தியாகராஜன், கதிர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us