Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மீது தாக்குதல் மூன்று பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 10, 2025 06:35 AM


Google News
செஞ்சி, : ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த நெகனுார் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்,74; ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பாலமுருகன், 38; என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை உள்ளது. கடந்த 31ஆம் தேதி பாலமுருகன் குடும்பத்தினர் குப்பன் நிலத்தின் வழியாக நடந்து சென்றனர்.

ஏன் எனது நிலத்தின் வழியாக நடந்து செல்கின்றீர்கள் என கேட்ட குப்பனை, பாலமுருகன் அவரது மனைவி ஆனந்தாயி, 33; உறவினர் வாசுதேவன், 58; சேர்ந்து தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த குப்பன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் பாலமுருகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us