Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

நிலத் தகராறில் 3 பேர் மீது வழக்கு

ADDED : மார் 24, 2025 04:30 AM


Google News
விழுப்புரம்: வானுார் அருகே நிலத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் யுவராஜா, 30; விவசாயி.

இவரது பக்கத்து நிலத்துகாரர்களான பரசுரெட்டிபளையத்தைச் சேர்ந்த வீராசாமி, பாலாஜி, சிவசங்கர் ஆகியோர், இரு தினங்களுக்கு முன், நிலத்தின் நடுவே பொதுவாக உள்ள வரப்பை வெட்டினர்.

இதனை யுவராஜா தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த 3 பேரும் யுவராஜவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வீராசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us