ADDED : பிப் 11, 2024 02:58 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று சேர்ந்தனுார் ரயில்வே தரைபாலம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணலை கடத்தி வந்த தென்குச்சிப்பாளையம் பஞ்சமூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.