ADDED : ஜூன் 26, 2025 02:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வளவனுார் வடக்கு அக்ரஹாரம் பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடந்தது.
தியான நிலைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமை தாங்கினார். முருகா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
இதில், மாதேஸ்வரி ஜகதம்பா சரஸ்வதி நினைவு நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பிரம்மகுமாரர்கள், பிரம்மகுமாரிகள் கலந்து கொண்டு தியானம் செய்தனர்.