விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபரின் பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம், பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகன்,38; இவர், இருசக்கர வாகனத்தை கடந்த 7ம் தேதி தனது வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் எழுந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.