ADDED : செப் 12, 2025 03:59 AM

விக்கிரவாண்டி: பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமா வரவேற்றார்.
வட்டாரத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி ஆசிரியர்களை பாராட்டி ராதா கிருஷ்ணன் நினைவு விருது
வழங்கி பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள் சந்திரலேகா, சசிகலா, தெய்வசிகாமணி, தரணி, ஜெயக்கொடி, கமலக்கண்ணன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அரிமா சங்க துணைத் தலைவர்கள் பாபு, குமுதா பொருளாளர் குமார், நிர்வாகிகள் மணிகண்டன், வினோத், கவியரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.