Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உரங்களை பதுக்கினால் லைசென்ஸ் ரத்து வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரங்களை பதுக்கினால் லைசென்ஸ் ரத்து வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரங்களை பதுக்கினால் லைசென்ஸ் ரத்து வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரங்களை பதுக்கினால் லைசென்ஸ் ரத்து வேளாண் அதிகாரி எச்சரிக்கை

ADDED : செப் 13, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : மாவட்டத்தில் உரங்களை கடத்துவது, பதுக்குவது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உரம் உரிமை ரத்து செய்யப்படும் என வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள், நெல், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, கரும்பு, தென்னை ஆகிய பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

இந்த பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 4,627 மெ.டன், டி.ஏ.பி., 2,844 மெ.டன், பொட்டாஷ் 1,288 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 6,693 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1,754 மெ.டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பதோ அல்லது பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்வதோ கூடாது.

இது தொடர்பான ஆய்வின் போது, கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டை மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்க கூடாது.

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையை விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி, வைத்து தினசரி பராமரிக்க வேண்டும்.

உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்க வேண்டும். விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்கும் வகையில், உர இருப்பு விபரத்தை பராமரித்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற, போலியான உரங்களை விற்க கூடாது.

மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு செய்யும் போது, உரங்களை அதிக விலைக்கு விற்பது, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பது, உரம் கடத்தல், பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபடுவது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us