Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆதித்யா விவேகானந்தா மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ஆதித்யா விவேகானந்தா மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ஆதித்யா விவேகானந்தா மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ஆதித்யா விவேகானந்தா மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

ADDED : மே 16, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் ஆதித்யா விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளி மாணவர் ஜீவா 484 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடமும், கோகுல்நாத் 480 மதிப்பெண்ணுடன் 2வது இடமும், லோகேஷ் 478 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்தனர். ஜீவா, லோகேஷ் கணித பாடத்திலும், ஜீவா, கோகுல்நாத், தனுஜா அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

450 மதிப்பெண்களுக்கும் மேல் 7 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கும் மேல் 15 பேரும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 99 சதவீத மாணவர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக்ஆனந்தன், அறக்கட்டளை உறுப்பினர் அனுதாபூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி முதல்வர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்பள்ளியில், இந்தாண்டு முதல் ஆலன் பயிற்றுநர்கள் மூலம், நீட், ஜெ.இ.இ., தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், பிளஸ் 1 சேர்க்கை கல்வி கட்டணத்தில் 100 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us