Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொலை வழக்கில் தலைமறைவு; 12 ஆண்டுக்கு பின் அக்கா, தங்கை கைது

கொலை வழக்கில் தலைமறைவு; 12 ஆண்டுக்கு பின் அக்கா, தங்கை கைது

கொலை வழக்கில் தலைமறைவு; 12 ஆண்டுக்கு பின் அக்கா, தங்கை கைது

கொலை வழக்கில் தலைமறைவு; 12 ஆண்டுக்கு பின் அக்கா, தங்கை கைது

ADDED : செப் 10, 2025 08:55 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான அக்காள், தங்கையை 12 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வீரபெருமாநல்லுாரை சேர்ந்தவர் நடராஜ். இவர், அக்கா தங்கையான மங்கை, 40; பிரியா, 29 ;இருவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரராகவன், 42; என்பவருக்கும் மங்கை இடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2013ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி பஞ்சமாதேவியில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்த வீரராகவனை, மங்கை மற்றும் அவரது தங்கை பிரியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர்.

வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து மங்கை உட்பட 3 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், மங்கை மற்றும் பிரியா ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதனால், இருவருக்கும் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதை தொடர்ந்து, வளவனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், கவுதம் தலைமையிலான போலீசார் செங்கல் சூளையில் வேலை செய்த மங்கையை ஈரோட்டிலும், பிரியாவை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலும் நேற்று கைது செய்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us