Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

ADDED : ஜன 29, 2024 06:16 AM


Google News
விழுப்புரம், : விழுப்புரத்தில் முதியவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், ராகவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 50; இவருக்கு சொந்தமான நிலம் பானாம்பட்டு பகுதியில் உள்ளது. இந்த நிலத்திற்கு சக்திவேல் நேற்று முன்தினம் சென்ற போது, வழியருகே அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 22; என்பவர் பைக்கில் அமர்ந்தபடி வழியை மறித்துள்ளார்.

சக்திவேல், அவரிடம் பைக்கை ஓரமாக நிறுத்தும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், சக்திவேலை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us