/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 12, 2025 12:24 AM
விழுப்புரம் : அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாளை 13ம் காலை 10:00 மணியளவில் பி.காம்., பி.எஸ்.சி., கம்யூட்டர் சையின்ஸ், பி.எஸ்.சி., வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் தரவரிசை மதிப்பெண் 400 முதல் 220 வரை உள்ள பி.சி., - பி.சி.எம்., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., ஆகிய பிரிவு மாணவ, -மாணவிகள் உரிய சான்றிதழ் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
பி.ஏ., அரசியல் அறிவியல், பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மட்டும் தரவரிசை 220 முதல் 200 மதிப்பெண் வரை உள்ள அனைத்துப்பிரிவு மாணவர்களும் நாளை காலை 10:00 மணியளவில் நடக்கும் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களோடு கலந்துகொள்ளலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.