ADDED : செப் 11, 2025 11:25 PM
உளுந்துார்பேட்டை: மணல் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநாவலூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாணியங்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கெடிலம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த வாணியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் சவுந்தர்,49; சடையன் மகன் முருகன்,35; அப்பாதுரை மகன் ராஜாமணி,29; ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மணல் கடத்தி வைத்திருந்த, 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.