ADDED : ஜன 06, 2024 06:15 AM
திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, 40; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் டி.கொணலவாடி கிராம பகுதியில் மது பாட்டில் விற்றஅதே கிராமத்தை சேர்ந்த வேணுகோபால், 50; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.