ADDED : செப் 21, 2025 11:04 PM
விழுப்புரம்: காணை அருகே 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன், ஆரியூர் ஏரிக்கரை அருகே உள்ள பாலம் வழியாக ரோந்து சென்றனர்.
அங்கு கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், 2 கிலோ கஞ்சா, லுங்கி, பேண்ட் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை அங்கு போட்டு சென்ற நபர்களை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.