Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

ADDED : மார் 22, 2025 08:50 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ளிக் கடையில் புகுந்து வாலிபரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் சங்கரமடம் வீதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 45; இவர், இதே பகுதியில் வெள்ளி கடை வைத்துள்ளார். இந்த கடையில் விழுப்புரம் கைவல்லியர் வீதியைச் சேர்ந்த பிச்சைமுகமது, 53; கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.

இவர், சரியாக பணி செய்யாததால் ஓம்பிரகாஷ் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிச்சைமுகமது தனது சகோதரர் பக்ருதீன், 45; என்பவருடன் சென்று கடையில் இருந்த ஓம்பிரகாஷ் மகன் கோராகுலை, திட்டி கொலை மிரட்டில் விடுத்துள்ளார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து பிச்சைமுகமது, பக்ருதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us