/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயின்கள் பறிப்பு; திண்டிவனத்தில் துணிகரம் இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயின்கள் பறிப்பு; திண்டிவனத்தில் துணிகரம்
இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயின்கள் பறிப்பு; திண்டிவனத்தில் துணிகரம்
இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயின்கள் பறிப்பு; திண்டிவனத்தில் துணிகரம்
இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயின்கள் பறிப்பு; திண்டிவனத்தில் துணிகரம்
ADDED : ஜூலை 05, 2024 05:08 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் இருவேறு இடங்களில் ஸ்கூட்டியில் சென்ற இரு பெண்களிடம் 13 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் பெலாக்குப்பம் கண்ணகி நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன், 45; இவரது மனைவி ஷர்மிளா,40; திண்டிவனம் காந்தி சிலை அருகே மெடிக்கல் கடை வைத்துள்ளார். நேற்று இரவு 9:30 மணிக்கு கடையை மூடிவிட்டு, இருவரும் ஸ்கூட்டியில், வீட்டிற்கு புறப்பட்டனர்.
அவரப்பாக்கம் கூட்ரோடு சந்திப்பை கடந்து, வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள இருவர், ஷர்மிளா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
திண்டிவனம் கல்பனா கண்ணன் நகரை சேர்ந்தவர் செல்வமணி மனைவி சாந்தி,21; இவர் நேற்று இரவு 9:00 மணிக்கு ஸ்கூட்டியில் சென்றபோது, பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர், சாந்தி அணிந்திருந்த 6சவரன் தாலி செயினை பறித்து சென்றனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரு பெண்களிடம் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் திண்டிவனம் நகர மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதுகுறித்து திண்டிவனம் நகர போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.