ADDED : ஜூலை 16, 2024 11:19 PM
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் மகள் விஷ்ணுபிரியா, 29; பிரேம்சந்துரு மகள் ரம்யா, 29 இருவரும் பெரிய முதலியர்சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களின் பின்புற சேரில் சீர்காழி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த டேவிட்ராஜ் மகன் ஜெரோன், 21; என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜெரோன் பின்புறம் சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணுபிரியா மீது சாய்ந்துள்ளார். இதில் இருவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெரோன் இருவரையும் தாக்கினார்.
புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ஜெரோனை கைது செய்தனர்.