Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்களை தாக்கிய வாலிபர் கைது

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

ADDED : ஜூலை 16, 2024 11:19 PM


Google News
மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் மகள் விஷ்ணுபிரியா, 29; பிரேம்சந்துரு மகள் ரம்யா, 29 இருவரும் பெரிய முதலியர்சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் பின்புற சேரில் சீர்காழி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த டேவிட்ராஜ் மகன் ஜெரோன், 21; என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ஜெரோன் பின்புறம் சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணுபிரியா மீது சாய்ந்துள்ளார். இதில் இருவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெரோன் இருவரையும் தாக்கினார்.

புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ஜெரோனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us