Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு

ADDED : ஜூலை 16, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்,: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, அரகண்டநல்லுார் பேரூராட்சி ஆதிதிராவிட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விபரம்:

நாங்கள் அரகண்டநல்லுார் பேரூராட்சி எல்லையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மனைகளாக பிரிக்கப்பட்டு 56 ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த 1994ம் ஆண்டில் மனைபட்டா வழங்கப்பட்டது.

அதில் நாங்கள் 27 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. எனவே, எங்கள் பகுதியில், குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், தெரு மின்விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us