Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

கிணறு வெட்டும் பணியின் போது கல் விழுந்து தொழிலாளி பலி

ADDED : ஜூன் 08, 2024 04:18 AM


Google News
அவலுார்பேட்டை, : மேல்மலையனுார் அருகே கிணறு வெட்டும் தொழிலாளி மீது கல் விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த தாழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை 4:00, மணிக்கு கிணற்றிலிருந்து கல் எடுத்து கிரேன் மூலம் வெளியேற்றும் பணிகள் நடந்தது.

அப்போது மேலே துாக்கிய பெரிய கல் எதிர்பாராத விதமாக கிரேனிலிருந்து நழுவி கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு, 52; என்பவரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து வி.ஏ.ஓ., ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us