ADDED : ஜூன் 04, 2024 11:47 PM
வானுார்: குடும்பத் தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வானுார், காந்தி வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு, 50; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், கடந்த 2ம் தேதி மது போதையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார். வானுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.