ADDED : ஜூன் 19, 2024 11:11 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மனைவி காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்தார்.
விழுப்புரம், கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவைச் சேர்ந்த பிரவீன், 27; கூலி தொழிலாளி. அவரது மனைவி கவுசல்யா, 25; இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார். கடந்த 15ம் தேதி வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரவீன் போலீசில் புகாரளித்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.