/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்., வேலுார் சரகத்திற்கு இடமாற்றம் விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்., வேலுார் சரகத்திற்கு இடமாற்றம்
விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்., வேலுார் சரகத்திற்கு இடமாற்றம்
விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்., வேலுார் சரகத்திற்கு இடமாற்றம்
விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்., வேலுார் சரகத்திற்கு இடமாற்றம்
ADDED : ஜூலை 24, 2024 10:18 PM
விழுப்புரம்:விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை அடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய மற்றும் சாராய வியாபாரிகளுடன் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறையில் 30 பேர் வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதனை வேலுார் சரகத்திற்கு மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் மீது வந்த தொடர் புகார் மற்றும் இடமாறுதலில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த அதிரடி இடமாற்றம் நடைபெற்றுள்ளது.