Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

ஐயனாரப்பன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

ADDED : ஜூலை 29, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம், : ஓட்டேரிபாளையம் ஐயனாரப்பன் கோவில் திருவிழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

விழுப்புரம் அடுத்த ஓட்டேரிபாளையத்தில் உள்ள ஸ்ரீ பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன் திருக்கோவிலில், ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. நேற்று காலை 9 மணிக்கு மூலவர் பொற்கலை பூரணி சமேத ஐயனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.

மூலவர் ஐயனாரப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பொற்கலை, பூரணி தேவியருடன் ஐயனாரப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை 5 மணிக்கு உற்சவர் பொற்கலை, பூரணி ஐயனாரப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு அன்னதானம் நடந்தது. இரவு உற்சவர் ஐயனாரப்பன் திருவீதியுலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us