Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேவாலயங்கள் பராமரிப்புக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தேவாலயங்கள் பராமரிப்புக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தேவாலயங்கள் பராமரிப்புக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தேவாலயங்கள் பராமரிப்புக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூலை 29, 2024 05:39 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பராமரிப்பு பணிக்கு மானியத்தோடு கூடிய நிதியுதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் செய்வதற்கு அரசு மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதன்படி, கூடுதல் பணிகளாக சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுருபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் ஆகிய உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தேவாலயம் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மானிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிருந்தால் ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கட்டட வரைபடம், திட்ட மதிப்பீட்டோடு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளோடு சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படுகிறது.

நிதியுதவி இரு தவணைகளாக கலெக்டர் ஒப்புதலோடு தேவாலயம் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us