Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி

ADDED : ஜூன் 18, 2024 05:13 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் அருகே மரகதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் கார்த்திக்,28; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரிகிறார்.

இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்றார்.

திருப்பச்சாவடிமேடு அருகே சென்ற போது, கோவிந்தபுரத்தை சேர்ந்த அன்பழகன்,45; என்பவர் ஓட்டி வந்த பைக் எதிரே வந்த போது திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் காயமடைந்த அன்பழகன், இவருடன் வந்த ஏழுமலை ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசார் அன்பழகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us