Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

ADDED : ஜூன் 22, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
வானுார், : குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

கிளியனார் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு 7;00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

நேற்று 21ம் தேதி அனுமந் வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று 22ம் தேதி யானை வாகனத்திலும், நாளை 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு பல்லக்கு வீதியுலா நடக்கிறது.

வரும் 25ம் தேதி திருத்தேர் விழா நடக்கிறது. 27ம் தேதி தீர்த்தவாரி திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us