Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது

மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது

மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது

மதுபாட்டில் கடத்திய புதுச்சேரி ஆசாமி கைது

ADDED : ஜூலை 18, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
வானூர் கிளியனூர் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய புதுச்சேரி நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது, புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், தென்கோடிப்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பைக்கில் சந்தேகப்படும் படி வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.

விசாரணையில் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 130 புதுச்சேரி குவார்ட்டர் பாட்டில்கள், 750 மி.லிட்டர் கொண்ட 5 மதுபாட்டில்கள், மற்றும் 10 லிட்டர் விஷ சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து புதுச்சேரி உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த சரவணன், 40; என்பரிடம் விசாரித்த போது, அவர் புதுச்சேரி பகுதியில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, கிளியனூர், திண்டிவனம் போன்ற பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us