Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 'பா.ம.க.,வை ஆதரித்தால் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்' நிறுவனர் ராமதாஸ் பேட்டி

'பா.ம.க.,வை ஆதரித்தால் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்' நிறுவனர் ராமதாஸ் பேட்டி

'பா.ம.க.,வை ஆதரித்தால் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்' நிறுவனர் ராமதாஸ் பேட்டி

'பா.ம.க.,வை ஆதரித்தால் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்' நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ADDED : ஜூலை 17, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம் : ''தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்'' என, கட்சியின் 36வது ஆண்டு துவக்க விழாவில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க.,வின் 36ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், நிறுவனர் ராமதாஸ், கட்சிக் கொடியேற்றி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி என்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வரும் பா.ம.க.,வை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏனோ தெரியவில்லை. பெரிய அளவிலும் ஆதரவு தரவில்லை.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், 35 ஆண்டுகளாக தமிழக மக்கள் பிரச்னைகளுக்காக போராடிக் கொண்டிருந்தாலும், மக்கள் என் பின்னால் முழுவதுமாக வரத் தயங்குகின்றனர்.

ஆனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்.

மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரும் என நான் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறேன்.

தற்போது அறிவித்து விட்டனர். தமிழ்நாட்டு மக்களை தேர்தல் நேரத்தில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி, பிறகு மின் கட்டணத்தை ஏற்றிவிட்டனர்.

தேர்தல் நேரத்தில் டோக்கன் உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமையாகிப் போன தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்வது.

மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.

பேட்டியின் போது, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில வழக்கறிஞர் சமூக நீதி பேரவை பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us