ADDED : ஜூன் 26, 2024 02:31 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பெற்றோர் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, செல்வம் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் அப்பு (எ) விஜயகுமார், 28; விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் பெற்றோர் திட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த விஜயகுமார், நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.