/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம் பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்
பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்
பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்
பைக் மோதிய விபத்தில் தாய், மகன்கள் காயம்
ADDED : ஜூலை 08, 2024 04:50 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மோதிய விபத்தில் வீட்டு முன் நின்றிருந்த தாய், மகன்கள் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி தமிழ்ச்செல்வி, 30; அவரது மகன்கள் கமலேஷ், 13; ஸ்ரீராம், 10; ஆகியோர், கடந்த 3ம் தேதி அவர்களது வீட்டு வாசலில் சாலையோரம் நின்றிருந்தனர்.அப்போது, சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தமிழ்செல்வி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.