ADDED : ஜூலை 25, 2024 06:22 AM
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து மொபல் போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டை சேர்ந்தவர் பிரபு, 30; இவர் தனது பெரியப்பா ராமதாஸ், 65: உடல்நிலை சரியில்லாமல் முண்டியபாக்கத்தில் உள்ள அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.
பிரபு நேற்று காத்திருப்போர் ஓய்வு அறையில் மொபைல் போனிற்கு சார்ஜர் போட்டு இருந்தார்.
அப்போது மருத்துவமனை வார்டு உதவியளர் மொபைல் போனை திருடியதை கையும் களவுமாக பிடித்து விக்கிரவாண்டி போலீசில்ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் சங்கராபுரத்தை அடுத்த புத்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சங்கர், 43: எனவும் கடந்த 17 வருடங்களாக மருத்துவமனையில் வார்டு உதவியாளராக பணிபுரிவதாகவும் மொபைல் போனை திருடியதை ஒப்புக்கொண்டார்.
போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மருத்துவமனையில் திருடிய 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.