/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பஸ்சில் பயணம் செய்தவர் மாரடைப்பால் இறப்பு பஸ்சில் பயணம் செய்தவர் மாரடைப்பால் இறப்பு
பஸ்சில் பயணம் செய்தவர் மாரடைப்பால் இறப்பு
பஸ்சில் பயணம் செய்தவர் மாரடைப்பால் இறப்பு
பஸ்சில் பயணம் செய்தவர் மாரடைப்பால் இறப்பு
ADDED : ஜூலை 25, 2024 06:22 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த வாலிபர் மாரடைப்பால் இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40: டைலர். இவர் கடந்த 21 ம் தேதி சொந்த வேலை காரணமாக சென்னை சென்று பஸ்ஸில் பல்லடத்திற்கு திரும்பினார்.
பிற்பகல் ஒரு மணி அளவில் விக்கிரவாண்டி டோல் பிளாசா அருகே வரும்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசில் அவரது மனைவி பாண்டேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.