Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது

தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது

தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது

தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது

ADDED : மார் 14, 2025 05:11 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் வந்த தொழிலாளியை தாக்கிய மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அடுத்த மங்களபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அன்புபிரியன், 26; கூலி தொழிலாளி. இவர், நேற்று மதியம் விழுப்புரம் நாப்பாளை தெரு பகுதியில் நடந்து வந்தார். அப்போது, பைக்கில் வந்த கீழ்ப்பெரும்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த மெக்கானிக் அஜித்குமார்,28; என்பரிடம் லிப்ட் கேட்டு, உட்கார்ந்து வந்துள்ளார்.

அப்போது, பொதுவாக திட்டியபடி பைக்கில் அமர்ந்து வந்த அன்புபிரியனை, அஜித்குமார் தன்னை தான் திட்டுவதாக நினைத்து, கீழே இறக்கிவிட்டு கீழே கிடந்த இரும்பு பைப்பால் கடுமையாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us