/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம் பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்
பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்
பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்
பெண் குழந்தையுடன் சென்ற இரண்டு பெண்கள் மாயம்
ADDED : ஜூன் 04, 2024 11:40 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆதார் பதிவுக்கு சென்ற ஒரு பெண் குழந்தையுடன், இரண்டு பெண்கள் காணாமல் போனது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் திருமலை, 39; இவரது மனைவி சரஸ்வதி, 27; மைத்துனர் ஆகாஷ் மனைவி புவனேஸ்வரி, 22; நேற்று முன்தினம் காலை 11;)0 மணிக்கு, சரஸ்வதி தனது மகள் வேல்விழிக்கு, 4; ஆதார் அட்டை பதிவு செய்வதற்காக புவனேஸ்வரியுடன் விழுப்புரம் சென்றார். ஆனால், மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
திருமலை அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.