Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது

ADDED : ஜூலை 04, 2024 12:51 AM


Google News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தகராறை தடுத்தவர்களை வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கெடார் அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 64; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா, 60; நேற்று காலை கலியபெருமாள், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்தாள், 45; வீரப்பன் மனைவி பத்மா, 45; ஆகிய இருவரும் தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கலியபெருமாள், இருவரையும் கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us