/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது
இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது
இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது
இருவருக்கு கத்திவெட்டு கூலித் தொழிலாளி கைது
ADDED : ஜூலை 04, 2024 12:51 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தகராறை தடுத்தவர்களை வெட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கெடார் அடுத்த தர்மாபுரியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 64; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா, 60; நேற்று காலை கலியபெருமாள், தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்தாள், 45; வீரப்பன் மனைவி பத்மா, 45; ஆகிய இருவரும் தடுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த கலியபெருமாள், இருவரையும் கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.