Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

ADDED : ஜூலை 04, 2024 12:50 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 10:45 மணியளவில் பையூரில் இருந்து திருக்கோவிலுார் - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் டிஸ்கவர் பைக்கில் சென்றார். சின்னசெவலை கிராம பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us