
திண்டிவனம்
மரக்காணம் சாணக்கிய வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளியின் துணை தாளாளர் வேல்முருகன் தலைமை தாங்கி யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் நரேன் பாபு வரவேற்றார். மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் யோகாசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார்
திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாக இயக்குனர் விஜயசாந்தி வாசுதேவன் தலைமை தாங்கினார். தாளாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். விழாவில் யோக கலை பயிற்சியாளர்கள் ஆதிநாராயணன், முத்து, சுந்தர்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளியில் உள்ள 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.
கள்ளக்குறிச்சி
ஜே.எஸ்., குளோபல் அகாடமி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், யோகா செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.


