ADDED : ஜூன் 16, 2024 10:33 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுபஆனந்தன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம், விழுப்புரம் வடக்கு தெருவில் ரோந்து சென்றனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மொய்தீன், 58; என்பவரது பெட்டிக் கடையை சோதனை செய்தனர். அங்கு, குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி, விற்றது தெரியவந்தது.
உடன், மொய்தீன் மீது வழக்குப் பதிந்த அவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுளை பறிமுதல் செய்தனர்.