ADDED : ஜூலை 22, 2024 01:31 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சுப ஆனந்தன் தலைமையிலான போலீசார், சித்தேரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, குட்கா பொருட்களை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ், 19; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.