ADDED : ஜூன் 19, 2024 11:10 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வளவனுார் அடுத்த கல்லப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
கோலியனுார் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 70; அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு, தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிந்தது. உடனே, போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.