/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர் அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஜூலை 24, 2024 07:12 AM

விழுப்புரம் : அவதுாறு வழக்கில் முன்னாள் அமைச்சர் சண்முகம் நேற்று கோர்ட்டில் ஆஜராகினார்.
விழுப்புரத்தில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் செப்டம்பர் மாதம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் தமிழக அரசை அவதுாறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சண்முகம், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் மீது விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சண்முகம், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆஜராகினர்.
இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மூன்று வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினர்.
அப்போது நீதிபதி ராகி, தடை உத்தரவு மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாக கூறியதும், தடை உத்தரவை நீட்டித்துபெற கால அவகாசம் கோரினர்.
அதனையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.