மேல்மலையனுாரில் குவிந்த பக்தர்கள்
மேல்மலையனுாரில் குவிந்த பக்தர்கள்
மேல்மலையனுாரில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 20, 2024 05:48 AM

செஞ்சி: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேல்மலையனுார் மற்றும் மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மேல்மலையனுார் அங்காளம்மன் சுவாமியை ஏராளமனோர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேர்த்திக் கடன் செலுத்த ஏராளமானோர் குவிந்தனர்.
அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதே போல் செஞ்சி அடுத்த மேலச்சேரியில் காட்டின் நடுவில் உள்ள பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தி, ஆடு, கோழிகளை பலி கொடுத்தனர்.